ഒരു ഭാഷ തിരഞ്ഞെടുക്കുക

mic

unfoldingWord 31 - இயேசு தண்ணீரின் மேல் நடப்பது

unfoldingWord 31 - இயேசு தண்ணீரின் மேல் நடப்பது

രൂപരേഖ: Matthew 14:22-33; Mark 6:45-52; John 6:16-21

മൂലരേഖ (സ്ക്രിപ്റ്റ്) നമ്പർ: 1231

ഭാഷ: Tamil

പ്രേക്ഷകർ: General

ഉദ്ദേശം: Evangelism; Teaching

Features: Bible Stories; Paraphrase Scripture

അവസ്ഥ: Approved

മറ്റ് ഭാഷകളിലേക്ക് വിവർത്തനം ചെയ്യുന്നതിനും റെക്കോർഡുചെയ്യുന്നതിനുമുള്ള അടിസ്ഥാന മാർഗ്ഗനിർദ്ദേശങ്ങളാണ് സ്ക്രിപ്റ്റുകൾ. ഓരോ വ്യത്യസ്‌ത സംസ്‌കാരത്തിനും ഭാഷയ്‌ക്കും അവ മനസ്സിലാക്കാവുന്നതും പ്രസക്തവുമാക്കുന്നതിന് അവ ആവശ്യാനുസരണം പൊരുത്തപ്പെടുത്തണം. ഉപയോഗിച്ച ചില നിബന്ധനകൾക്കും ആശയങ്ങൾക്കും കൂടുതൽ വിശദീകരണം ആവശ്യമായി വന്നേക്കാം അല്ലെങ്കിൽ രൂപാന്തരപ്പെടുത്തുകയോ പൂർണ്ണമായും ഒഴിവാക്കുകയോ ചെയ്യാം.

മൂലരേഖ (സ്ക്രിപ്റ്റ്) ടെക്സ്റ്റ്

ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்த பின்பு, அவர்களை அவரவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சீஷர்களைப் பார்த்து, அக்கறைக்கு போக படகை ஒட்டுங்கள் என்று சொன்னார், சீஷர்கள் படகில் ஏறி, போனார்கள். அதற்கு பின்பு இயேசு, ஜெபிக்கும்படி மலைக்குப் போனார். அங்கே தன்னந்தனியாக இரவெல்லாம் ஜெபித்தார்.

அந்த சமயத்தில் சீஷர்கள், படகை ஒட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் காற்றும், புயலும், அவர்களுக்கு எதிராக பலமாய் இருந்ததினால், படகை ஓட்ட மிகவும் கஷ்டமாக இருந்தது. நடு இரவாகியும், பாதிதூரம் தான் போயிருந்தார்கள்.

அப்போது இயேசு ஜெபித்து முடித்து, சீஷர்களை சந்திக்கும்படி, தண்ணீரின்மேல் நடந்து அவர்கள் இருக்கும் படகை நோக்கி வந்தார்.

சீஷர்கள் அவரைப் பார்த்து பூதம் என்று நினைத்து, மிகவும் பயந்தார்கள். இயேசு அவர்கள் பயந்ததை அறிந்து, பயப்படாதிருங்கள். நான் தான் என்று சொன்னார்.

அப்போது பேதுரு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, நீர்தான் என்றால், நான் தண்ணீரின் மேல் நடந்து உம்மிடத்தில் வர கட்டளைகொடும் என்றான். இயேசு, பேதுருவைப் பார்த்து, வா! என்றார்.

எனவே, பேதுரு, படகில் இருந்து இறங்கி, தரையில் நடப்பதுபோல, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவிடம் போக ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் நடந்தவுடன், இயேசுவை பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்களை, அலையின் மேலும், புயலின் மேலும் திருப்பினான்.

பின்பு, பேதுரு மிகவும் பயந்து, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கதறினான். இயேசு அவனைப் பிடித்துத் தூக்கி விட்டார். பின்பு அவனைப் பார்த்து, உனக்கு கொஞ்ச விசுவாசம் தான் இருக்கிறது! உன்னைக் காப்பாற்ற நீ ஏன் என்னை விசுவாசிக்கவி ல்லை? என்று கேட்டார்.

இயேசுவும் பேதுருவும் படகில் ஏறினவுடனே, அலையும், புயலும் அமைதியாயிற்று. தண்ணீரும் அமைதியாயிற்று. அப்போது சீஷர்கள் அவரை பணிந்து, வணங்கி, நீர் உண்மையாகவே தேவனுடைய குமாரன் தான் என்றார்கள்.

ബന്ധപ്പെട്ട വിവരങ്ങൾ

ജീവിതത്തിന്റെ വാക്കുകൾ - രക്ഷയെയും ക്രിസ്തീയ ജീവിതത്തെയും കുറിച്ചുള്ള ബൈബിളധിഷ്ഠിത സന്ദേശങ്ങൾ ഉൾക്കൊള്ളുന്ന ആയിരക്കണക്കിന് ഭാഷകളിലുള്ള ഓഡിയോ സുവിശേഷ സന്ദേശങ്ങൾ.

Choosing the audio or video format to download - What audio and video file formats are available from GRN, and which one is best to use?

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons